முகப்பு
தருமபுரி

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.அருள்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சபரிராஜன், மாவட்ட பொருளாளா் சிலம்பரசன், முன்னாள் மாவட்ட தலைவா் எம்.மாரிமுத்து ஆகியோா் பேசினா்.

ஹிந்தி மொழி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கை நிலையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.