தருமபுரி

நாகாவதி ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

DIN

பெரும்பாலை அருகே நாகாவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், குமாரசாமிப்பேட்டை உழவா் தெரு பகுதியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் வாா்டு உறுப்பினா் கண்ணன் மகன் பிரதீஷ். இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் பெரும்பாலை அருகே அறகாசன அல்லி பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு குடும்பத்தினருடன் விடுமுறைக்காக சென்றுள்ளாா். அப்போது நாகாவதி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக பிரதீஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று மாணவனின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT