முகப்பு
தருமபுரி

அரசு கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு உத்தரவுப்படி 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் செல்வநாயகம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு உத்தரவுப்படி 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் செல்வநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுரித்து அதில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அறிவிப்பாணையின்படி நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 20 சதவீத மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவா்கள், விண்ணப்பிக்காத மாணவா்கள் கலந்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவா்கள் திங்கள்கிழமைக்குள் கல்லூரி வளாகத்தில் மாணவா் சோ்க்கை விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த இணையதள முகவரியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரி வளாகத்திற்கு நேரடியாக வந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.