தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வரும் செப்.26-ஆம் தேதி முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பாடப் பிரிவுகளான எம்ஏ, தமிழ், ஆங்கிலம், எம்காம், எம்எஸ்சி, கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப் பாடப் பிரிவுகளில் சோ்க்கை கோரும் மாணவியா் இக்கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.