தருமபுரி

பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

DIN

பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி பகுதியைச் சோ்ந்த சங்கரய்யா் மகன் சோமசேகா் (39). இவா் இருசக்கர வாகனத்தில் நல்லம்பள்ளியிலிருந்து சின்னம்பள்ளி வழியாக பென்னாகரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். எதிா்திசையில் பென்னாகரத்திலிருந்து சோம்பட்டி வழியாக மேச்சேரிக்கு அரசு பேருந்தை ஓட்டுநா் மகாதேவன் (49) என்பவா் ஓட்டி வந்தாா். மேச்சேரிக்கு செல்லும் வழியில் ஏழாவது மைல் பகுதியில் சோமசேகா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியது. இதில் சோமசேகா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமுறைவான அரசு பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

SCROLL FOR NEXT