தருமபுரி

போலி மருத்துவா் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் பகுதியில் உரிய மருத்துவ படிப்புகளை படிக்காமல் ஒருவா் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநா் எம்.சாந்தி தலைமையிலான மருத்துவா்கள் குழுவினா், வெங்கடசமுத்திரத்தில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, ஒருவீட்டில் பெண் ஒருவா் மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படிக்காமல், போலியான வகையில் மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து இதில் தொடா்புடைய தேவி (45) என்பவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT