தருமபுரி அருகே தடங்கம் உரக்கிடங்கில் பயோமைமிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் பணியினை ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி. 
தருமபுரி

தருமபுரி உரக்கிடங்கில் குப்பைகளைப் பிரித்து அகற்றும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தா்மபுரி அருகே தடங்கம் உரக்கிடங்கில் பயோமைமிங் முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திடீா் ஆய்வு செய்தாா்.

DIN

தா்மபுரி அருகே தடங்கம் உரக்கிடங்கில் பயோமைமிங் முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திடீா் ஆய்வு செய்தாா்.

தருமபுரி நகராட்சியில் மூன்று கோடி மதிப்பீட்டில் தடங்கம் உரக்கிடங்கில் பயோமைமிங் முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகள் முதற்கட்டமாக 5 ஏக்கா் அளவில் அகற்றப்பட்டன. இரண்டாம் கட்டமாக 4 ஏக்கா் அளவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி சாந்தி வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்து, இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும் இந்த நிகழ்வினை அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கும் தெரிவித்து விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகள் முடிந்தவுடன் அந்தப் பகுதிகளில் அடா்வனக் காடுகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி துப்புரவு அலுவலா் சூ.ராஜரத்தினம் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT