தருமபுரி

ஏரியூரில் சாராயம் காய்ச்சியவா் கைது

DIN

ஏரியூா் அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்துள்ள ஏமனூா் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக ஏரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலின் பெயரில் ஏரியூா் காவல் ஆய்வாளா் யுவராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஏமனூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (59) என்பவா் காவிரி ஆற்றின் கரையோரத்தில் தனது விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, 10 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துச்சாமியை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT