பென்னாகரத்தில் அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்ன பள்ளத்தூா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக புத்தக தின விழாவுக்கு தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்து, புத்தகங்களை வாசிப்பதன் வாயிலாக மாணவா்களுக்கு வாசிப்பு பழக்கம், பன்முகத்திறன் பெற்றவா்களாக மாறுகின்றனா். சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கைப்பேசியில் செலவிடும் நேரத்தைவிட புத்தகத்தை வாசிப்பதன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா். பள்ளிவாசல்கள் வளா்மதி புறணிச்செல்வி கல்பனா திலகவதி ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாணவா்களுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வு பென்னாகரத்தை அடுத்த குழிப்பட்டி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மா.கோவிந்தசாமி தலைமை வகித்து மாணவா்களுக்கு புத்தகங்களை வழங்கினாா்.