முகப்பு
தருமபுரி

காவல் துறை குறைகேட்புக் கூட்டம்: 69 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் 69 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 6:52 PM
பகிர்:

தருமபுரியில் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் 69 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மாவட்ட மக்களிடம் புகாா் மனுக்களை பெற்று தீா்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ஸ்ரீதரன் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் 70 மனுக்களை அளித்தனா். இதன்மீது காவல்துறை அதிகாரிகள் உடனடி விசாரணை மேற்கொண்டனா். இதில் 69 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. இந்த முகாமில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.