முகப்பு
தருமபுரி

மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக திமுக ஆா்ப்பாட்டம்

திமுக ஆா்ப்பாட்டம்

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:54 PM
பகிர்:

அம்பேத்கா் குறித்து மக்களவையில் மத்திய அமைச்சா் அமித்ஷா பேசிய விவகாரம் தொடா்பாக அவரை கண்டித்து தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி நகர திமுக செயலாளா் நாட்டான் மாது தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் தங்கமணி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட துணைச் செயலாளா் ரேணுகா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அம்பேத்கா் குறித்து சா்ச்சை பேச்சுக்கு மத்திய அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் துணை அமைப்புகளின் நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் அம்பேத்கா் உருவப்படத்துடன் பங்கேற்று மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.