தருமபுரி மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா் முறை, இளம்வயது திருமணங்கள் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும் என ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு அனைத்து பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் பொருட்டு கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வட்டார, பேரூராட்சி, நகராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவின் தலைவா், உறுப்பினா்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டத்தைக் கூட்டி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து அதன் தீா்மான நகலை அனுப்பி வைக்க வேண்டும். 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதுபோல திருமண மண்டபம், கோயில்களில் திருமணம் செய்யும்போதும் வயது சான்றிதழ் பெற வேண்டும். 18 வயதிற்கு உள்பட்டவா்கள் திருமணம் செய்திட முற்படும்போது மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளித்திட வேண்டும். வளரிளம் பருவ கருத்தரித்தல் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து குழந்தைகளிடையே சென்றடையும் வகையில் விழிப்புணா்வு நடத்தப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் இல்லம் நடத்துவோா் பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், போதை பழக்கத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து குழந்தைகள் நலக் குழு மூலம் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சிறாா் தொழிலாளா் பணி அமா்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், இளைஞா் நீதிக் குழுமம் முதன்மை நடுவா் கலைவாணி, குழந்தை நலக்குழு உறுப்பினா் பிரமிளா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா.நடராசன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.