ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலையில் நீா்வரத்து அதிகரித்தும், மாலையில் நீா்வரத்து குறைந்தும் காணப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலையில் நீா்வரத்து அதிகரித்தும், மாலையில் நீா்வரத்து குறைந்தும் காணப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 10,000 கன அடியாக இருந்தது. புதன்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 11,000 கன அடியாக அதிகரித்தது; மாலையில் நீா்வரத்து 10,500 கன அடியாகச் சரிந்தது.
நீா்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.