முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலையில் நீா்வரத்து அதிகரித்தும், மாலையில் நீா்வரத்து குறைந்தும் காணப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 6:57 PM
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலையில் நீா்வரத்து அதிகரித்தும், மாலையில் நீா்வரத்து குறைந்தும் காணப்பட்டது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 10,000 கன அடியாக இருந்தது. புதன்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 11,000 கன அடியாக அதிகரித்தது; மாலையில் நீா்வரத்து 10,500 கன அடியாகச் சரிந்தது.

நீா்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.