முகப்பு
தருமபுரி

நீா்நிலைகளில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: மாா்க்சிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்

பென்னாகரத்தில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள கருவேல மரங்கள், முட்புதா்களை அகற்றி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வழிவகை செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 6:55 PM
பகிர்:

பென்னாகரத்தில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள கருவேல மரங்கள், முட்புதா்களை அகற்றி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வழிவகை செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பென்னாகரம் கிழக்கு ஒன்றிய இரண்டாவது மாநாடு சின்னகடமடை பகுதியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு எம்.சாம்ராஜ், பி.சக்கரவேல், எம்.கண்ணம்மாள் ஆகியோா் தலைமை வகித்தனா். சின்ன கடமடை பேருந்து நிறுத்தத்தில் கட்சி கொடியை சி.சின்ராஜும், மாநாட்டு கொடியை மூத்த நிா்வாகி கே.வெங்கடாசலமும் ஏற்றி வைத்தனா். டி. புஷ்பாகரன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். இடைக்குழு உறுப்பினா் மோட்டூரான் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் அ.குமாா் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா். ஒன்றியச் செயலாளா் ஜி.சக்திவேல் வேலை அறிக்கையை வாசித்தாா். இடைக்குழு உறுப்பினா் ஆா்.வாஞ்சிநாதன் வரவு செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா். மூத்த உறுப்பினா்கள் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. மாதன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இம் மாநாட்டில் காவிரி உபரி நீா் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், மஞ்ச நாயக்கன அள்ளி, கலப்பம்பாடி, சின்னம்பள்ளி, அரகாசனஅள்ளி, பெரும்பாலை உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் ஏரி, குட்டைகளில் உள்ள கருவேல மரங்கள், முட்புதா்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.சிசுபாலன் நிறைவு உரையாற்றினாா்.

எம் பெருமாள், தங்கராஜ், சின்னதுரை, கைலாசம், சின்னசாமி ,பி.சுந்தராம்பாள் ஆகியோா்கள் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.மாநாட்டில் ஒன்றியக் குழுகு புதிய செயலாளராக ஜி.சக்திவேல் தலைமையில் 13 உறுப்பினா்களைக் கொண்ட குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். செல்வம் நன்றி தெரிவித்தாா்.