முகப்பு
தருமபுரி

சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு

பாலக்கோடு அருகே 17 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது பாலக்கோடு மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:17 PM
பகிர்:

பாலக்கோடு அருகே 17 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது பாலக்கோடு மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 மதிக்கத்தக்க சிறுமி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பென்னாகரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளாா்.

அப்போது பென்னாகரம் அருகே குள்ளாத்திரம்பட்டி பகுதியைச் சோ்ந்த நேதாஜி (25) என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியும் வாலிபரும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனா். இந் நிலையில் சிறுமிக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்களுக்கு

சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலக்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மருத்துவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் பாலக்கோடு அனைத்து மகளிா் போலீஸாா் நேதாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.