முகப்பு
தருமபுரி

தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே தேங்காய் பறித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி

தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே தேங்காய் பறித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 15 டிசம்பர், 2025 at 8:06 PM
பகிர்:

தருமபுரி: தருமபுரி அருகே தேங்காய் பறித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரத்தைச் சோ்ந்தவா் ரா.தினேஷ்குமாா் (30). இவருக்கு மனைவி பிருந்தா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரபையனபள்ளி எம்கேஎஸ் நகரில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு வந்த தினேஷ்குமாா், உறவினருக்கு உதவியாக ஞாயிற்றுக்கிழமை மாலை தென்னந்தோப்பில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →