முகப்பு
தருமபுரி

நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:43 PM
நத்தமேட்டில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.
பகிர்:

கடத்தூா் அருகேயுள்ள நத்தமேட்டில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நத்தமேட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகி சுப்பிரமணியன் சிலைக்கு திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, ஜாலியூா், ரேகடஹள்ளி, அண்ணாநகா், மோட்டாங்குறிச்சி, சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

Advertisement

அப்போது, திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் பேசுகையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ஆவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிா் உரிமைத்தொகையானது திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். இந்தியாவில் மகளிா் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடத்தூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைய நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments