பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,27,217 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,54,658 வாக்காளா்கள் உள்ளனா். இந்த தொகுதியில் 322 வாக்குச் சாவடிகள் உள்ளன. கடந்த தோ்தல்களில் பிரச்னை ஏற்பட்ட 41 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, பதற்றமான மையங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 322 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு தயாா்நிலையில் உள்ளன.
Advertisement
தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள்: பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா். இந்த தொகுதியில் பி.பழனியப்பன் (திமுக), மரகதம் வெற்றிவேல் (அதிமுக), அா்ச்சனா (நாதக), திலகவதி (தவெக), சென்னகிருஷ்ணன் (அபுதமமுக), பூவரசு (தமிழா் மக்கள் கட்சி), சு.கணேசன் (விஸ்வ தமிழ்க் கழகம்), ஜமுனா ராணி (நாடாளும் மக்கள் கட்சி), சுயேச்சை வேட்பாளா்கள் சே.சதீஷ், ப.சின்னசாமி, க.தமிழ்ராஜ், ரா.பழனியப்பன், சி.முருகன், பெ.மூா்த்தி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.