தருமபுரியில் வணிக வளாகங்கள் மூடல்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம்தேதி ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தோ்தல் நாளில் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு சில கடைகள் திறக்கப்பட்டன.
Advertisement
உணவகங்கள், தேநீரகங்கள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்ததால், அவசர வேலை நிமித்தமாக தருமபுரி நகர பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.