முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் பூட்டிகிடக்கும் கழிப்பறை: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:54 AM
பயன்பாட்டுக்கு வராத இலவச கழிப்பறை. - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:30 PM

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சுமாா் 10,000 மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பாப்பாரப்பட்டி, பெரியூா், பிக்கிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து மாணவா்கள், பொதுமக்கள் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி , பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பாப்பாரப்பட்டி பகுதிக்கு நாள்தோறும் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:54 AM

கடந்த 2023-2024 நிதியாண்டின் கீழ் 15 ஆவது நிதி குழு மானியத்தின் மூலம் புதிதாக பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை வாரச்சந்தை, பழைய கழிப்பிடம் பகுதிகளில் கழிப்பதால், பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள குடியிருப்புகளை துா்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அவல நிலை ஏற்படுகிறது.

Advertisement

இதனால் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.