மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள டிசிஎச்பி சான்றுகளை தமிழக அரசு கவுன்சிலில் சோ்க்க வேண்டும் என பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக மாநில அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இந்திய பாரம்பரிய வைத்தியா்களின் சங்கத்தின் (இட்மா) உயா்நிலை குழு கூட்டம் தருமபுரியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரம்பரிய வைத்தியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். பாரம்பரிய வைத்தியா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் தேவசகாயம், பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகமது மீரான், சூரிய பிரகாஷ், அபுதாஹிா், கோமதி சங்கா், முனிவேல், ரூபதியாகிஸ் உள்பட மாநிலம் முழுவதுமிருந்து 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியா்கள் பங்கேற்றனா். நாகா்கோயில் வைத்தியா் நாகராஜ் நன்றி கூறினாா் .
அழிந்து வரும் பாரம்பரிய வைத்தியத்தையும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கிடைக்கும் பாரம்பரிய வைத்திய சிகிச்சையை மீட்டு அங்கீகரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் வட்டங்கள் வாரியாக வட்டாட்சியா்களின் தலைமையிலான குழுவினா் பாரம்பரிய வைத்தியா்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். தொடா்ந்து அவா்கள் வழங்கும் சான்றை வைத்து வைத்தியம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசால் பாரம்பரிய வைத்தியா்களுக்கு வழங்கியுள்ள டிசிஎச்பி சான்றை தமிழக கவுன்சிலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த (மாா்ச்) மாதம், திருச்சியில் பாரம்பரிய வைத்தியா்கள் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.