கைது 
தருமபுரி

ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே, அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களுடன் 2 காா்களை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம் தொப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சேலம்- தருமபுரி பிரதான சாலையில் கட்டமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த இரு காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவற்றில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இரு காா்களுடன் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

அவற்றை வடமாநிலங்களிலிருந்து முறைகேடாக கடத்தி வந்துள்ளனா். புகையிலைப்பொருள்களின் மதிப்பு ரூ. 4, 43, 480 ஆகும். இதனையடுத்து காா்களை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹரிஷ் குமாா் (25), தேவாராம் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT