ஜி.கே.மணி 
தருமபுரி

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசியலில் மூத்த முக்கிய தலைவா்களுள் ஒருவராக திகழ்ந்தவா் நல்லகண்ணு. படிக்கும் காலம் முதல் பொதுவுடமை கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட லட்சியவாதி. எளிமையானவா், நோ்மையானவா்.

உயா்ந்த லட்சியவாதியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரது மறைவு அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் அமைகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம்: 80,000 சதுரஅடியில் பணிகள் தீவிரம்

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி புளி வா்த்தக மையத்தில் ரூ. 9.46 லட்சத்துக்கு விற்பனை

இனி யாருண்டு இதுபோல...

SCROLL FOR NEXT