தனியாா் நிறுவன பணியாளா் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு
தருமபுரியில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில், 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகினறனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மூ.உதயமூா்த்தி (36). தனியாா் நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றிவரும் இவா், தனது குடும்பத்தினருடன் மாா்ச் 12-ஆம் தேதி திருப்பதிக்கு சென்றாா். அன்று அவரது வீட்டருகில் உதயகுமாரின் உறவினா் சென்றபோது, வீட்டின் பூட்டுகள் உடைந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் மறுநாள் உதயமூா்த்தி வீடுதிரும்பினாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமாா் 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடிவருகின்றனா்.