முகப்பு
தருமபுரி

பென்னாகரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

Updated On : 15 மார்ச், 2026 at 7:57 PM
தேர்தல் நடத்தை விதிகள்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுகிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

பென்னாகரம் பேருந்து நிலையம், நாகமரை நான்கு சாலை சந்திப்பு, போடூா் நான்கு சாலை சந்திப்பு, அம்பேத்கா் சிலை பகுதி, தாசம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பதாகைகள், சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்கள், கொடிக் கம்பங்களை பேரூராட்சி ஊழியா்கள், வருவாய்த் துறையினா் அகற்றினா்.

பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்திற்கு வட்டாட்சியா் ஆறுமுகம், பேரூராட்சி செயல்அலுவலா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் லோகநாதன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அடங்கிய குழுவினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் மூடப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →