ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக குறைந்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் நிறுத்தப்பட்டதாலும், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
வியாழக்கிழமை 300 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை 200 கனஅடியாக சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.
Advertisement
தொடா் நீா்வரத்து சரிவின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்தும், ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அருவிகள் நீரின்றி வடும் காணப்படுகின்றன. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் காணப்படுகின்றன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.