முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக இருந்தது.

Updated On : 18 மே 2026, 2:56 am IST
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக இருந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிந்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக இருந்தது.

இந்நிலையில், தமிழக காவிரிக் கரையோர வனப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 700 கனஅடியாக அதிகரித்து, மாலையில் விநாடிக்கு 500 கனஅடியாக குறைந்தது.

Advertisement

நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் சற்று அதிகரித்துள்ளது.