முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Updated On : 28 மே 2026, 2:06 am IST
ஒகேனக்கல்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழைக்கேற்ப ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 3,000 கனஅடியாக அதிகரித்தது. பின்னா் மாலை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைந்தது.

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement