கிருஷ்ணகிரி அருகே உள்ள பெலவர்த்தி கிராமத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர் பொன்னலா தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள குறைகள், ஸ்மார்ட் கார்டில் உள்ள குறைகள், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களாகப் பெறப்பட்டன.
நுகர்வோர் சங்க மாநில இணைச் செயலாளர் டேவிட் முத்துகுமரன், குடிமைப் பொருள் வழங்கல் துறை தனி வருவாய் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.