கிருஷ்ணகிரி

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமை வகித்து பேசியது:
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பேச்சு, பட்டிமன்றம், கவிதை அரங்கம், கலை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செம்மையாக நடத்த வேண்டும்.
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் நகராட்சித் தலைவர் குருசாமி, செயலர் மாரிமுத்து ஆகியோர் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்திலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் மன்றத்தில் இணைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
விழாவில் திமுக மாவட்ட இலக்கிய அணி தலைவர் எல்லோரா.மணி, முன்னாள் சென்னத்தூர் ஊராட்சித் தலைவர் ராமாஞ்சி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT