கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை

DIN

தேன்கனிக்கோட்டை  அருகே  மூதாட்டியை  அடித்துக் கொலை செய்ததாக அவரது  கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,   தேன்கனிக்கோட்டை வட்டம்  எஸ்.குருபட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (90). இவரது  மனைவி நஞ்சம்மா (80).  இவர்களுக்கு   3 மகன்கள்,  ஒரு மகள் உள்ளனர்.  இந்த நிலையில் தம்பதி இடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பா கட்டையால்  நஞ்சம்மாவை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து  நஞ்சம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்  செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து முனியப்பாவை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT