கிருஷ்ணகிரி

வாகனங்களில் பேட்டரி திருடிய 4 பேர் கைது

DIN

சூளகிரி பகுதியில் வாகனங்களில் இருந்து பேட்டரி திருடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தியிருந்த ரோடு ரோலரில் இருந்த ரூ.8,000 மதிப்புள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல், சூளகிரி அருகே உள்ள பெரிய சப்படியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த டிராக்டரில் இருந்த ரூ.12,000 மதிப்புள்ள பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் மேலும் சில இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பேட்டரி திருடுபோனதாக வந்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (29), சூளகிரி முஸ்லீம் தெருவைச் சேர்ந்த யாசின் (18), மகபூப் (18), உத்தனப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (26) ஆகியோர் வாகனங்களில் தொடர்ந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT