முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி சாவு

ஒசூரில் வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஒசூரில் வாகனம் மோதியதில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.
சேலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுக்கர்சவன் (53). இவர் ஒசூரில் குமுதேப்பள்ளியில் தங்கி வேலை செய்து வந்தார். ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.