போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம்
போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க விநாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வன்னியரசு வரவேற்றார். இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வரை மாணவிகள் 700- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4 குழுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஆசிரியர் நவீன்குமார் பேசினார். மாணவிகளுக்கான சிறப்பு செய்முறை காட்சி, அறிவியல் விந்தைகள் குறித்த காணொலி மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க விநாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வன்னியரசு வரவேற்றார். இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வரை மாணவிகள் 700- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4 குழுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஆசிரியர் நவீன்குமார் பேசினார். மாணவிகளுக்கான சிறப்பு செய்முறை காட்சி, அறிவியல் விந்தைகள் குறித்த காணொலி மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.