கிருஷ்ணகிரி

ஒசூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆய்வு

DIN

ஒசூர் அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநர் பிரேம்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
ஒசூரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களின் நோய் பாதிப்பு, சிகிச்சை முறை குறித்து  கேட்டறிந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் குளிர்காலம் நெருங்கி வருவதால் பரவலாக காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சில இடங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் களப்பணிகள், மருத்துவப் பணிகள், சுகாதாரப் பணிகள் ஆகியவற்றை பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
கிருஷ்ணகிரி, ஒசூர் அரசு மருத்துவனைகளில் மருந்து கையிருப்பு, உபகரணங்களின் செயல்பாடு,  நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கர்நாடக மாநில எல்லையில் ஒசூர் உள்ளதால் நோய் பரவும் அபாயம் குறித்து கண்காணித்து வருகின்றோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT