கிருஷ்ணகிரி

"ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டன'

DIN

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டதாக ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கவுசல்யா  தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் இதுவரை 185-க்கும் மேலான ஆணவக் கொலைகள் நிகழ்ந்து விட்டன. ஆனால், இதுவரை  தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலையே நடக்கவில்லை என்று ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். இனியும் அப்படித்தான்  சொல்வார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, நந்தீஷ், சுவாதி ஆணவக் கொலையையும், ஏதோ ஒரு கொலை  போன்று கடந்து போய்விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
ஆணவப் படுகொலையைத்  தடுப்பதற்கு, உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும். மேலும் இந்த வழக்கில் வன்கொடுமைச் சட்டம்  பதியப்பட வேண்டும். வெறும் கொலைக் குற்றமாக இதை பார்க்க முடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT