சாலை விபத்தில் பிளஸ் 2 மாணவர் சாவு
ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
ஒசூர் மத்தம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாஷிங்டன். இவரது மகன் ஹரிகரன் (18). இவர் ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு உணவகம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாணவர் மீது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலே மாணவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒசூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.