கிருஷ்ணகிரி

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

DIN

போச்சம்பள்ளி வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை, மத்தூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியராக முனுசாமி பணியாற்றி வருகிறார். இவர், பணி நிமித்தமாக மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு வழியாக வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது, ஈச்சங்காட்டை சேர்ந்த சிலர், வட்டாட்சியர் முனுசாமியை மறித்து அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரினராம். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் செல்லிடப்பேசியில் பதிவு செய்தனராம். 
இதனால், வட்டாட்சியருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். மேலும், விடியோ பதிவு செய்ய பயன்படுத்திய செல்லிடப்பேசியை வட்டாட்சியர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், சிலர் தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக வட்டாட்சியர் முனுசாமி, மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப் பதிந்த போலீஸார், பேரடஅள்ளியைச் சேர்ந்த பரத், ஈச்சங்காட்டைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT