அஞ்செட்டி அருகே இளைஞரைக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அஞ்செட்டி- ஒகேனக்கல் செல்லும் சாலையில் சீங்கோட்டை அருகே மிட்டாதாரன்கொட்டாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கிடந்தார்.
மேலும், அவரது உடல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதில் பாதி உடல் எரிந்த நிலையில் இருந்தது. இதை கவனித்த அந்த பகுதி பொதுமக்கள் அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அஞ்செட்டி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.