ஒசூர் புதிய கோட்டாட்சியராக குமரேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
இவர் நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்(சில்லறை விற்பனை) மாவட்ட மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இதற்கு முன்பு ஒசூர் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த விமல்ராஜ், திருப்பூர் தனித் துணை ஆட்சியராக (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாற்றப்பட்டார். ஒசூர் கோட்டாட்சியராக பொறுப்பேற்ற குமரேசனுக்கு, நேர்முக உதவியாளர் சண்முகம், ஒசூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி, மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.