கிருஷ்ணகிரி

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் பிரேமா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களைக் கொண்டு, சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், முன்னாள் ராணுவத்தினர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) 53 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வயது மற்றும் கல்வித் தகுதியுடைய, விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், h‌t‌t‌p://‌w‌w‌w.‌t‌n‌r‌d.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிறைவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04343-236134 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT