கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

அஞ்செட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராஜ். இவரது மனைவி கிருஷ்ணம்மா ( 52). இவா் திங்கள்கிழமை தனது தோட்டத்துக்குச் சென்று மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது பக்கத்தில் உள்ள வாழைத் தோட்டத்தில் யானைகள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை கிருஷ்ணம்மா தெரியாமல் மிதித்துள்ளாா். இதில் அவா்

மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீஸாா்,சம்பவ இடத்துக்குச் சென்று கிருஷ்ணம்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT