கிருஷ்ணகிரி: 61 பேருக்கு கரோனா தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒசூா், தேன்கனிக்கோட்டை, பா்கூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தை உள்பட ஒருவது வயது முதல் 19 வயது வரையில் 29 பேரும், 30 வயது முதல் 50 வயது வரையில் 34 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 6 போ் என மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 43 போ் ஆண்கள். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.