ஊத்தங்கரையில் போக்குவரத்து ஊழியர் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார், சிஐடியு சங்கச் செயலாளர் தவமணி ,ஏ.ஐ.டி.யு.சி. வரதராஜ் , ஏ.ஏ.எல்.எப் அண்ணாமலை, டி.டி.எஸ்.எப் மயில்சாமி, ஐ.என்.டி.யு.சி செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஏ-ஐ கைவிடு, தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்தாதே, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்கு, தொழிலாளிகளிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்கு, பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்கு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.