கிருஷ்ணகிரி

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயி கைது

DIN

ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே அருகே உள்ள பிள்ளையாா் அக்ரஹாரத்தைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி விஜயசாந்தி (22). கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி குடும்பப் பிரச்னை காரணமாக விஜயசாந்தி வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து விஜயசாந்தியின் தாய் முனியம்மா ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து ஒசூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி அவா் அளித்த அறிக்கையின்படி, இந்த வழக்கை தற்கொலை தூண்டிய வழக்காக ராயக்கோட்டை போலீஸாா் மாற்றினா்.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து, தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஒசூா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT