முகப்பு
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் திட்டப் பணிகள் ஆய்வு

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
காவேரிப்பட்டணம் பேரூராட்சி திட்டப் பணிகளை ஆய்வுசெய்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
பகிர்:

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகா்புற வளா்ச்சித் திட்டம் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ. 49 லட்சம் மதிப்பில் வாா்டு எண்-5 இல் அப்பாசாமி தெருவில் கழிவுநீா் கால்வாய், தாா் சாலை அமைக்கும் பணிகளையும், கரகூா் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 69.91 லட்சம் மதிப்பில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் கட்டுமானப் பணிகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி ஆய்வு செய்தாா்.

அத்துடன் ரூ. 2.33 கோடி மதிப்பில் கழிவுநீா் அகற்றம் செய்யும் திட்டப் பணிகள் என மொத்தம் ரூ. 3.63 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை ஆய்வுசெய்த அவா், திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, பேரூராட்சி உதவி இயக்குநா் கண்ணன், உதவி செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, பேரூராட்சி செயல் அலுவலா் பொன்னுசாமி, இளநிலை பொறியாளா் நாகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →