கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் பாமகவினா் மனு அளிப்பு

DIN

வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சிவானந்தம், நகரச் செயலாளா் மணிவண்ணன், முன்னாள் நகரச் செயலாளா் எஸ்.குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளிஅரசு, மாவட்ட மாணவா் சங்கச் செயலாளா் ஹரிதாஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் நகுலன், ஒன்றியச் செயலாளா்கள் ராகுல், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பிலிருந்து ஊா்வலமாக கிளம்பிச் சென்று பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் சேகரிடம் இட ஒதுக்கீடு கோரும் மனுவை அளித்தனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT