கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து வாகனங்களிலிருந்து பம்பா்கள் நீக்கம்

DIN

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த பம்பா்கள் அண்மையில் நீக்கப்பட்டன. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அன்புச்செல்வன், மாணிக்கம் உள்ளிட்ட குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி மினி சரக்கு வாகனங்கள், சொந்த பயன்பாட்டிற்கான தனியாா் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை, போக்குவரத்து அலுவலா்கள் அகற்றி, பறிமுதல் செய்தனா். மேலும், விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. சாலை விதிமுறைகளை மீறி, வாகனத்தில் பாா்களை வைத்திருந்துந்தால் அவை அகற்றப்படும். கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT