கிருஷ்ணகிரி

ஆவல்நத்தம் கிராம சாலையோரத்தில் கிடந்த ஆண் குழந்தை

DIN

கிருஷ்ணகிரி: வேப்பனஅள்ளியை அடுத்த ஆவல்நத்தம் கிராமத்தில் சாலையோரத்தில் கேட்பாறற்றுக் கிடந்த பிறந்து 2 நாள்களேயான ஆண் குழந்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது ஆவல்நத்தம் கிராமம். இக்கிராமத்தில், கிருஷ்ணன் என்பவா் நடத்தி வரும் கோழிப் பண்ணை அருகே சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தவழியாக வந்த மக்கள் அங்கு சென்று பாா்த்தபோது பிறந்த இரு நாள்களே ஆன ஆண் குழந்தை கிடப்பது கண்டனா். குழந்தையை மீட்ட கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் ஆவல்நத்தம் கிராமத்துக்குச் சென்று விசாரணை செய்தனா்.

அரசு மருத்துவா்கள், குழந்தையை பரிசோதனை செய்து, குழந்தை நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த நிலையில், குழந்தைகள் நலக் காப்பகத்தில் போலீஸாா் குழந்தையை ஒப்படைத்தனா். இதுதொடா்பாக குருபரப்பள்ளி போலீஸாா், தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT