கிருஷ்ணகிரி

அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழுக் கூட்டம், தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அனைத்து வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்துத் தொகுதிகளிலும் கோரிக்கை மாநாட்டை நடத்துவது, மத்திய, மாநில அரசுகளின் மக்களின் விரோதக் கொள்கைகளைஎதிரித்து, தருமபுரி மாவட்டத்தில் டிச.28 முதல் 31-ஆம் தேதிவரையில் 300 இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT